வெட்ட வெளியில் போராட்டத்தை தொடர்ந்த முதல்வர்

பந்தல் வேண்டாம் என மறுத்து வெட்ட வெளியில் முதல்வர் வே.நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார்.

பந்தல் வேண்டாம் என மறுத்து வெட்ட வெளியில் முதல்வர் வே.நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். 
புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெளியே  முதல்வர் நாராயணசாமி வெட்ட வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்த ஆதரவாளர்கள் ஷாமியானா பந்தல் அமைக்க முயற்சித்தனர்.
அப்போது,  முதல்வர் நாராயணசாமி அவ்வாறு அமைத்தால் நாமே முன்னுதாரணமாகி விடுவோம் என்று கூறி மறுத்தார்.
மேலும், வெட்ட வெளியிலேயே போராட்டத்தை தொடர்ந்துள்ளார். புதன்கிழமை பகலில் வெயிலின்போதும் மரத்தின் நிழலிலேயே அமர்ந்தார்.  மேலும் இரவு வெட்ட வெளியிலேயே தூங்கினார். வியாழக்கிழமையும் புதுச்சேரியில் கடும் வெயில் இருந்து வருகிறது.  ஆனாலும், முதல்வர் நாராயணசாமி வெட்ட வெளியிலேயே தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார். அமைச்சர்களும் அவருக்கு ஒத்துழைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
வெப்பம் காரணமாக மரத்தடி நிழல்களில் உட்கார்வதும், பின்னர் எழுந்து மாற்று இடங்களுக்குச் செல்வதுமாக முதல்வரும், அமைச்சர்கள் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com