பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிபந்தனை விதிக்க முடிவு செய்தது முதல்வர்தான்: கிரண் பேடி

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு நிபந்தனை விதிக்க ஒப்புதல் அளித்தது முதல்வர் நாராயணசாமிதான் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு நிபந்தனை விதிக்க ஒப்புதல் அளித்தது முதல்வர் நாராயணசாமிதான் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதற்கான கோப்பு 2 முறை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன.
ஏழைகள், சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்து கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டதாக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க நிபந்தனை விதிக்க முடிவு செய்தது முதல்வர் நாராயணசாமிதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com