புதுவை முதல்வர் துபை பயணம்

புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, 2 நாள் பயணமாக துபைக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, 2 நாள் பயணமாக துபைக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து இரவு விமானம் மூலம் துபை புறப்பட்ட அவர்,  வியாழன், வெள்ளிக்கிழமை (ஜன.17, 18) ஆகிய இரு நாள்கள் அங்கு தங்குகிறார். பின்னர், துபையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர் வே.நாராயணசாமி, புதுவையில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு விடுத்து பேசுவார். புதுவையில் தொழில் தொடங்கும் வெளிநாட்டினர்,  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதுவை அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் அந்த மாநாட்டில் விளக்கிப் பேசவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஜன.18-ஆம் தேதி இரவு துபையில் இருந்து புதுவைக்கு திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com