இடதுசாரி மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி சாரம் திடலில் உள்ள ஜீவா சிலைக்கு புதுவை அரசு சார்பில், சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம், துணைச் செயலர்கள் வி.எஸ்.அபிஷேகம், கீதநாதன், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பொருளாளர்
சுப்பையா, ஏஐடியுசி பொதுச் செயலர் சேதுசெல்வம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு இடதுசாரி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.