தனியார் ஸ்கேன் மையத்தில் 2 ஆவது நாளாக சோதனை

புதுச்சேரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள பிரபல ஸ்கேன் மையத்தில் வியாழக்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். உதவி ஆணையர் குமார் தலைமையில் 13 அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, சில ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து  எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் ஸ்கேன் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com