முன்னாள் முதல்வர் ஜானகிராமன் படம் திறப்பு

முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் படத் திறப்பு விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் படத் திறப்பு விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லித்தோப்பு தொகுதி திமுக சார்பில்,  முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு 
முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
நெல்லித்தோப்பு தொகுதி திமுக செயலர் நடராஜன், தொகுதி அவைத் தலைவர் பழ.தண்டபாணி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம்,  அரசுக் கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ., திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன்,  ஆர்.வி.ஜானகிராமனின் மகன்கள் அசோக்குமார், சந்திரேஷ்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாநில திமுக இலக்கிய அணித் துணைத் தலைவர் கவிதைபித்தன் ஜானகிராமனின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஆர்.ராஜாங்கம்,  தமிழ் மாநிலக் குழு உறுப்பினர்கள் முருகன், 
பெருமாள்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலர் அமுதவன், புதிய நீதிக் கட்சித் தலைவர் பொன்னுரங்கம், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, திமுக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன்,  அமுதாகுமார், பொருளாளர்கள் சண்.குமரவேல்,  வழக்குரைஞர் செந்தில்குமார் (வடக்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com