உலக சுற்றுச் சூழல் தினம்

புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி கல்லூரியில் உலக சுற்றுச் சூழல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி கல்லூரியில் உலக சுற்றுச் சூழல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காற்று மாசுபடுவதைத் தவிர்ப்போம், நீராதாரத்தைப் பெருக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்  எஸ்.வி.சுகுமாரன் எம்எல்ஏ, செயலர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ. பி.கோபிகா கலந்து கொண்டார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் வரவேற்றார். புதுவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் சரவணன் வாழ்த்திப் பேசினார். கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவர் பா.ராஜாராம் நன்றி கூறினார். கோபிகா எம்எல்ஏ சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com