திருபுவனை தொகுதியில் மின்வெட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்எல்ஏ கோபிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருபுவனை துணை மின் அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம், கோபிகா எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட செல்லிப்பட்டு பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண, உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும். வம்புப்பட்டு முருகவரம் தெருவில் எரியாமல் இருக்கும் தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். விநாயகம்பட்டு ராஜேஸ்வரி நகர், ஈஸ்வரன் நகர், கெங்க நகர், ஜெயம் நகர் ஆகியவற்றில் புதிய தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
அண்டியார்ப்பாளையம், நல்லூர் குச்சிபாளையம், சன்னியாசிக்குப்பம், மதகடிப்பட்டு - புதுநகர், கோகுல்நகர் பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.
சோரப்பட்டு தென்னச் சாலையில் புதிய தெரு விளக்கு அமைக்க வேண்டும். நல்லூர் ஈஸ்வரன் நகரில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியை இழுத்துக் கட்ட வேண்டும்.
கலிதீர்த்தால்குப்பம் - மதினா நகர், ராஜா நகர், மோகன் நகர், ராமகிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
குச்சிபாளையம், சிலுக்கரிப்பாளையம், மயிலம் பாதை ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.