முத்தியால்பேட்டையில் புதிய மின்மாற்றி: எம்எல்ஏ இயக்கிவைத்தார் 

முத்தியால்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட காட்டாமணிகுப்பத்தில் புதிய மின்மாற்றியை அந்தத் தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தார்.

முத்தியால்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட காட்டாமணிகுப்பத்தில் புதிய மின்மாற்றியை அந்தத் தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தார்.
 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நீண்டகாலமாக நிலவி வந்த மின் பற்றாக்குறை மற்றும் மின் தடை பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 3 ஆண்டுகாலமாக தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் பகுதியில் மின்மாற்றி பழுதானதால் ஏற்பட்டு வந்த மின் தடைக்கு தீர்வு காணும் வகையில், அதை மாற்றி புதிய மின்மாற்றியை அமைக்க மின் துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
 அதனடிப்படையில், காட்டாமணிக்குப்பம் பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றியை இயக்கி, தொகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கலந்துகொண்டு புதிய மின் மாற்றியை இயக்கி வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மின் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் குமார், ஊர் பிரமுகர்கள் காளியப்பன், ராஜா, ஏழுமலை, நவீன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com