பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவு:
தாயகம் திரும்பும் உங்களை வரவேற்கிறேன். உங்களது வீரம் பாராட்டுக்குரியது. கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. உங்களைப் பார்த்து முதலில் இந்தியனாகவும், பிறகு தமிழனாகவும் நான் பெருமைப்படுகிறேன் என அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.