துப்பாக்கி வைத்திருப்போர் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துப்பாக்கிகள் மற்றும் இதர வெடி பொருள்கள் வைத்திருப்பதற்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றவர்கள், உடனடியாக அவரவர்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.