புதுச்சேரி கடற்கரைச் சாலையில்  வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில்

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் வெள்ளிக்கிழமை இரவு வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரி 
டி. அருண் தொடக்கி வைத்தார்.
இதில், வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ள "என் வாக்கு என் உரிமை, காசுக்கு ஓட்டை விற்காதீர்கள்' உள்ளிட்ட 18 விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்பட்டன. 
மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் தூதர்களாக செயல்படப் போகும் கல்லூரி மாணவர்கள், விழிப்புணர்வு வண்ண கையேடுகளை மக்களிடையே விநியோகித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். 
விழாவில் தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com