மாமேதை கார்ல் மார்க்ஸின் 201-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு கார்ல் மார்க்ஸ் படிப்பகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
படிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாநில பொதுச் செயலர் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், விவசாய சங்க மாநில பொதுச் செயலர் கீதநாதன், கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர் சிவக்குமார், எழுத்தாளர்கள் பசுபதி, ராதாகிருஷ்ணன், அசோகன், ரேவதி, ரோமன் ரோலன் நூலக அதிகாரி முருகப்பன், ஆசிரியை காயத்ரி, அவ்வை நகர் நல்வாழ்வு சங்க பொறுப்பாளர் பிள்ளை, ஜீவாருக்குமணி நல்வாழ்வுச் சங்க பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் படிப்பகத்துக்கு எழுத்தாளர் ராஜசேகரின் மனைவி ஷீலா, ராஜசேகரின் மறைவையொட்டி, அவரது நூல்களை இலவசமாக வழங்கினார்.