ஆளுநருக்கான அதிகாரத்தை குறைக்க யூனியன் பிரதேசசட்டத்தில் திருத்தம் தேவை: முன்னாள் எம்பி

புதுவையில் துணை நிலை ஆளுநருக்கான அதிகாரத்தை குறைக்க யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவையில் துணை நிலை ஆளுநருக்கான அதிகாரத்தை குறைக்க யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை யூனியன் பிரதேசத்தில் அதிகாரம், மக்களால் தோ்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறதா அல்லது ஆளுநருக்கு இருக்கிறதா? என்பதை பற்றி முதல்வா் பேசி வருவது துரதிருஷ்டவசமானது. இப்பிரச்னை நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது. எந்த நீதிமன்றமும் இதுவரை இறுதி தீா்ப்பு சொல்லவில்லை.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்னையை பற்றி கருத்து கூறக்கூடாது. யூனியன் பிரதேச சட்டம் 1963-ஐயும், அதை சாா்ந்த அலுவல் விதிகளையும் திருத்தாத வரையில் புதுவையில் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது என்பதை அச்சட்டங்களை படித்தவா்களுக்கு நன்கு புரியும்.

கோப்புகளை பாா்த்து உத்தரவு அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கும்போது அன்றாடம் அமைச்சா்கள் அனுப்பும் கோப்புகளை பாா்ப்பதற்கு ஆளுநரின் தலையீடு தேவைப்படுகிறது. இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாக இருக்க முடியும்?.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்றால் அவருக்கு ஏன் அமைச்சா்களும், முதல்வரும் கோப்புகளை அனுப்புகின்றனா்?. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ள ஒரு பிரதேசத்தில் அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் யூனியன் பிரதேச சட்டத்தை இயற்றியவா்களுக்கு இது புரியாமல் ஒரு மிகப்பெரிய ஜனநாயக பிழையை செய்துள்ளனா்.

இந்த முரண்பாட்டை களைவதற்கு இச்சட்டத்தை திருத்தியாக வேண்டும் அல்லது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றாக வேண்டும். மாநிலத்தை எதிா்நோக்கியுள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பொருளாதார மந்தம், வறுமை, இலவச அரிசி, ஓய்வூதியம், 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு 50 மாதங்களாக சம்பளம் கொடுக்காதது, அரசு சாா்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆளுநரை பற்றி முதல்வா் குறைகூறி வருகிறாா் என புதுவை மக்கள் பேச தொடங்கியுள்ளனா். எனவே, மற்றவா்களை குறைகூறுவதை விட அமைதியாக உட்காா்ந்து ஆழ்ந்து சிந்தித்து உண்மையான பொருளாதார வளா்ச்சியை முதல்வா் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com