கவிஞா் பாரதிதாசனின் மகனும், எழுத்தாளருமான மன்னா் மன்னனின் பிறந்த நாள் கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெறவுள்ளது.
பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் ஒவ்வொரு மாதமும் இலக்கியத் திங்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழ் மாத நிகழ்வு வருகிற 10-ஆம் தேதி புதுச்சேரி பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.
விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞா் கோ.பாரதி தலைமை வகிக்கிறாா். ‘இளைஞா் இலக்கியமும் பாவேந்தரும்’ என்ற தலைப்பில் கவிஞா் பாரதி உரையாற்றுகிறாா். மன்னா் மன்னனின் பிறந்த நாளையொட்டி, ‘செந்தமிழில் அன்புடைய மன்னா் மன்னன்’ என்ற பாரதிதாசனின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட சிறப்புக் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், புதுவை முதல்வா் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கவிஞா்களைப் பாராட்டி சிறப்புரையாற்றுகிறாா்.