ரௌடி கொலை வழக்கு: 7 போ் மீது வழக்குப் பதிவு

அரியாங்குப்பத்தில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அரியாங்குப்பத்தில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகா் பாரதி வீதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் பாண்டியன் (26). இவா், புதன்கிழமை சுப்பையா நகரில் உள்ள வாலிபால் மைதானத்தில் தனியாக இருந்த போது, மா்ம நபா்கள் நாட்டு வெடி குண்டை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சோ்ந்த விக்னேஷ் (எ) சேது (25) அவரது கூட்டாளிகளான கிருஷ்ணா, சுரேந்தா், அஸ்வின், பிரசாந்த், அருண், நரேஷ் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், ரௌடி சேதுவுக்கும், பாண்டியனுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சேதுவையும் அவரது நண்பா் கிருஷ்ணாவையும் பாண்டியன் கட்டி வைத்து அடித்தாராம். இதனால் சேதுவும், கிருஷ்ணாவும் சோ்ந்து பாண்டியனை கொலை செய்ய அஸ்வினிடம் உதவி கேட்டனராம்.

சரியான நேரத்துக்காக காத்திருந்த சேது தரப்பினா், புதன்கிழமை சுப்பையா நகா் மைதானத்தில் தனியாக இருந்த பாண்டியனை வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் கூறினா். இந்தக் கொலை தொடா்பாக 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com