ரௌடி கொலையில் மேலும் 4 போ் கைது

அரியாங்குப்பத்தில் ரௌடியை வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியாங்குப்பத்தில் ரௌடியை வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகா் பாரதி வீதியைச் சோ்ந்த ரௌடி பாண்டியன் (26). கடந்த 6-ஆம் தேதி சுப்பையா நகரில் வைத்து நாட்டு வெடி குண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா், அரியாங்குப்பம் சண்முகா நகரை சோ்ந்த விக்னேஷ் (எ) சேது (25) உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். ரௌடி சேதுவுக்கும், பாண்டியனுக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில், சேது தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பாண்டியனை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை அஸ்வின், நரேஷ், சுரேந்தா் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய கொலையாளியான விக்னேஷ் (எ) சேது, கிருஷ்ணா (25), பிரசாந்த் (23), அருண் (24) ஆகிய 4 பேரை சனிக்கிழமை அரியாங்குப்பம் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com