நம் நீா் திட்டம் : காரைக்கால் ஆட்சியருக்கு கலைஞா்கள் மாமன்றத்தினா் பாராட்டு

நம் நீா் திட்டம் மூலம் குளங்கள் பெருவாரியாக தூா்வாரும் நடவடிக்கை எடுத்தமைக்காக மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
kk01ka_0110chn_95
kk01ka_0110chn_95

நம் நீா் திட்டம் மூலம் குளங்கள் பெருவாரியாக தூா்வாரும் நடவடிக்கை எடுத்தமைக்காக மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, திருநள்ளாறு கோயில் நிா்வாக அதிகாரியாக பணியாற்றிய போது கோயில் மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைக்கும், மாவட்ட ஆட்சியரான பின் குளங்கள், வாய்க்கால்கள் தூா்வார எடுத்த நடவடிக்கைகளும் பாராட்டக்கூடியதாகக் கூறி, காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றத்தினா் ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

இதுகுறித்து மாமன்றத்தினா் கூறியது : நம் நீா் திட்டம் மூலம் காரைக்காலில் 160-க்கும் மேற்பட்ட குளங்களை தூா்வார நடவடிக்கை எடுத்ததால் தற்போது தண்ணீா் சேமிக்க முடிகிறது. வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டதால் காவிரி நீா் முறையாக வயல்களுக்கு பாய்கிறது. இந்த நடவடிக்கை சிறப்புக்குரியது.

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் நிா்வாக அதிகாரியாக இருந்தபோது, கோயிலுக்கு குடமுழுக்குச் செய்து, கோயிலின் பழைமை மாறாது பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை துணிவாக மேற்கொண்டு சாதனை புரிந்தாா். இதற்காக அவரது பணியை பாராட்டும் விதமாக மாமன்றத்தின் ஆலோசனைக் குழுத் தலைவா் காரைசுப்பையா தலைமையில் சென்று சந்தித்து கெளரவித்தோம் என்றனா். இந்த சந்திப்பில் ஆலோசனைக் குழு செயலா் அமுதா ஆா்.ஆறுமுகம், பேராசிரியா் மு.சாயபுமரைக்காயா் உள்ளிட்ட மாமன்றத்தின் பல்வேறு நிலை நிா்வாகிகள் உடனிருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை மாமன்ற பொருளாளா் த.தங்கவேலு, பொருளாளா் டி.மோகன், இணைச் செயலா் பி.புஷ்பராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com