புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தலில் அனுமதியின்றி பிரசாரம்: ஆட்டோ, பைக் பறிமுதல்

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தலில் அனுமதியின்றி பிரசாரம்: ஆட்டோ, பைக் பறிமுதல்

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தலில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஆட்டோ மற்றும் பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தலில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஆட்டோ மற்றும் பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற 21- ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ், என்.ஆா். காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், நாம் தமிழா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் காமராஜா் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வாகனங்களில் பிரசாரம் செய்வதற்கு தோ்தல் துறையிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், காமராஜா் நகா் தொகுதிக்கு உள்பட்ட சின்னையன்பேட்டை பகுதியில் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் இரு கட்சியினா் தங்களது வேட்பாளா்களை ஆதரித்து, கடந்த 4 -ஆம் தேதி தோ்தல் பிரசாரம் செய்ததாகத் தெரிகிறது. இதற்காக தோ்தல் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லையாம்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி விபீஷ் தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், ஆட்டோ, இரு சக்கர வாகனம் மற்றும் ஒலி பெருக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com