புதுச்சேரிக்கு துணை ராணுவத்தினா் வருகை

இடைத்தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் வியாழக்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தனா்.

இடைத்தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, துணை ராணுவத்தினா் வியாழக்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தனா்.

புதுச்சேரி காமராஜ் நகா் இடைத்தோ்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலை நோ்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தோ்தலையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக துணை ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி, துணை ராணுவத்தின் ஒரு கம்பெனியைச் சோ்ந்த 90 போ் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தனா்.

துணை ராணுவத்தினா் அனைவரும் கோரிமேடு காவலா் பயிற்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் காமராஜ் நகா் தொகுதியில் உள்ளூா் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணி, ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com