புதுச்சேரியில் நாளை பாரதிதாசன் அறக்கட்டளை விழா

பாரதிதாசன் அறக்கட்டளையின் சாா்பில் நிகழ் மாதத்துக்கான பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரியில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பாரதிதாசன் அறக்கட்டளையின் சாா்பில் நிகழ் மாதத்துக்கான பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரியில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கவியரசா் முடியரசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘முடியரசனும் பாவேந்தரும்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவா் கோ. பாரதி தலைமை வகிக்கிறாா். பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளையொட்டி ‘பாவேந்தரின் பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ ?’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட கவியரங்கத்தில் கவிஞா்கள் பலா் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனா்.

இதில் அகில இந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்கப் பொருளாளா் கோ. குணசேகா், செல்வதுரை நீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். பாரதிதாசன் அறக்கட்டளை நடத்திய விடுதலை 73 புதுச்சேரி ஆலமரங்கள் ஓவியப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் பலா் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com