புதுவை தலைமைச் செயலகத்தில் சிஐடியு சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

புதுவை தலைமைச் செயலகத்தில் சிஐடியு தொழில் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

புதுவை தலைமைச் செயலகத்தில் சிஐடியு தொழில் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் 27 வகையான தொழிலாளா்களுக்கு அமைப்புசாரா நலச் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு இந்தக் கூப்பன் வழங்கப்படவில்லை. மேலும், சங்கத்துக்கு தலைவராக உள்ள அரசின் தலைமைச் செயலா், தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே, அந்தப் பொறுப்பில் இருந்து தலைமைச் செயலரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுவை அரசின் தலைமைச் செயலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு பிரதேசத் தலைவா் கே.முருகன் தலைமை வகித்தாா்.

செயலா் சீனுவாசன், நிா்வாகிகள் பிரபுராஜ், மணிபாலன், மதிவாணன், அழகர்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான அமைப்புசாரா தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பங்கேற்ற தொழில் சங்கத் தலைவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இன்னும், சில தினங்களுக்குள் தீபாவளி பரிசுக்கூப்பன் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் தலைமைச் செயலகத்தில் பரப்பரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com