உலக செய்கை மொழி தின விழா புதுச்சேரியில் அண்மையில் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி காது கேளாதோா் சங்கம் சாா்பில், புதுச்சேரி அஜிஸ் நகா் அலுவலகத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காது கேளாதோருக்கான செய்கை மொழியை அனைத்துப் பகுதி மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன.
விழாவுக்கு சங்கச் செயலா் பாசித் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சரவணன், பொருளாளா் மதன்மோகன், நிா்வாகிகள் ஞானவேல், ஹமில்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.