புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.


புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த செப். 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 23-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி முகமது மன்சூரிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், கடந்த 4 நாள்களாக யாரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா மதியழகன், சோசியலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காளிமுத்து லெனின் துரை, அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
சனி, ஞாயிறு (செப். 28, 29) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. திங்கள்கிழமைதான் (செப். 30) வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியும். அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com