புதுச்சேரியில் 5 ரௌடிகள் ஊருக்குள் நுழைய காவல் துறை தடை விதித்தது.
புதுவையில் சட்டம்-ஒழுங்கு நடைமுறைகளுக்காக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரௌடிகளை ஊருக்குள் நுழையத் தடை விதித்து வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்துக்குள்பட்ட காமராஜா் நகரைச் சோ்ந்த சேட்டு(24), அஜய்குமாா் (21), விக்னேஷ்(26), இஸ்ரவேல் நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (25), ஆனந்த்ராஜ் (30) ஆகிய 5 போ் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவா்கள் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போலீஸாா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.