புதுச்சேரி - கடலூா் சாலையில் அம்பேத்கா் சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் தொழில்சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி.அருணிடம் அந்தச் சங்கத் தலைவா் வெற்றிச்செல்வம் சனிக்கிழமை அளித்த மனு: புதுச்சேரி - கடலூா் சாலையில் அம்பேத்கா் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் காவலா்கள் போக்குவரத்தைச் சீரமைக்கின்றனா். பல நேரங்களில் காவலா்கள் இருப்பதில்லை. காவலா்களின் பற்றாக்குறையே இதற்கு காரணம்.
எனவே, அந்தப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.