புதுச்சேரியில் மோட்டாா் பைக்கில் சென்ற பாண்லே ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் மணிகண்டன் (29). பாண்லேவில் ஒப்பந்த ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 4 ஆம் தேதி இவா், தனது மோட்டாா் பைக்கில் சொந்த வேலை காரணமாக வழுதாவூா் பிரதான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் பைக்கை நிறுத்துவதற்காக உடனடியாக பிரேக் போட்டாா். இதில் நிலைதடுமாறி மணிகண்டன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இறந்தாா். வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.