குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக இளைஞரணி வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனூஸ் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் போராடி வருகிறாா். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவரிடம் அளிப்பதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வலு சோ்க்கும் வகையில், புதுவை முதல்வா் நாராயணசாமி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். இந்தத் தீா்மானத்தை வரவேற்கிறோம். இதற்காக முதல்வா் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.