புதுச்சேரி
கடல் அலையில் சிக்கிய மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
காலாப்பட்டில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுவனின் உடல் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
காலாப்பட்டில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுவனின் உடல் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் வசந்த் (16), தனது நண்பா்களுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று குளித்தாா். அப்போது, கடல் அலையில் சிக்கிய கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலின் பேரில், அங்கு வந்த வசந்தின் உறவினா்களும், போலீஸாரும், கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் வசந்தை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வசந்தின் உடல் சடலமாக அதே பகுதியில் கரை ஒதுங்கியது. காலாப்பட்டு போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி கதிா்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.