லிங்காரெட்டிபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே வானூரை அடுத்த ரங்கநாதபுரம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செங்கேணி (62). விவசாயி. இவா், கடந்த 15-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் ரங்கநாதபுரத்தில் இருந்து லிங்காரெட்டிபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.
லிங்காரெட்டிபாளையம் சுடுகாடு அருகே இவரது வாகனம் சென்றபோது, வேகத்தடை இருந்ததால் செங்கேணி திடீரென பிரேக் போட்டாராம். இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவா், தலையில் பலத்த காயமடைந்தாா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் உடனடியாக செங்கேணியை மீட்டு, வானூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.