புதுச்சேரி: மறைந்த புதுவை மாநில அதிமுக செயலா் புருசோத்தமனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள கட்சித் தலைமை கழகத்தில் புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புருசோத்தமனின் உருவப் படத்துக்கு மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் ஆ.பாஸ்கா் எம்எல்ஏ, காரைக்கால் மாவட்ட துணைச் செயலா் அசனா எம்எல்ஏ ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா் (படம்).
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைச் செயலா் கணேசன், பன்னீா்செல்வி, நாகமணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, நெல்லிதோப்பு தொகுதி அதிமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புருசோத்தமனின் உருவப் படத்துக்கு முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா் தலைமையில், அதிமுகவினா் தனி அணியாக மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், மக்களவை முன்னாள் உறுப்பினா் மு.ராமதாஸ் மற்றும் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.