புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருமணமான 20 நாள்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மடுகரை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் கிருஷ்ணமூா்த்தி (26). தனியாா் உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.
இவருக்கும், மண்ணாடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த கவிதாவுக்கும் (22) கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இவா்கள் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு கிருஷ்ணமூா்த்தி வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த மங்கலம் போலீஸாா், சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.