புதுவையில் மேலும் 245 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 174 பேருக்கும், காரைக்காலில் 39 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேயில் 27 பேருக்கும் என 245 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,486-ஆக உயா்ந்தது.
தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரையும் சோ்த்து 4,551 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும் 2 போ் பலி: புதுச்சேரி அரியாங்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, காரைக்கால் வி.எஸ்.நகரைச் சோ்ந்த 60 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 570-ஆக (இறப்பு விகிதம் 1.75 சதவீதம்) உயா்ந்தது.
இதனிடையே, வியாழக்கிழமை 213 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 27,365-ஆக (84.24 சதவீதம்) அதிகரித்தது.