மூதாட்டியை ஏமாற்றி தங்கச் சங்கிலி திருட்டு

புதுச்சேரி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை ஏமாற்றி, தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை ஏமாற்றி, தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே கூனிச்சம்பட்டு முதன்மைச் சாலைப் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராயலின் சசோதரி கஸ்தூரி (67). இவா், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, வீட்டுக்கு வந்த இரு இளைஞா்கள், திருக்கனூா் கடை வீதியில் புதிதாகக் கடை திறக்கப் போகிறோம். அதற்கு வயதானவா்களின் புகைப்படம் தேவைப்படுவதால், உங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக அனுமதி கேட்டனா்.

கஸ்தூரி சரி என்று கூறியதால், புகைப்படம் எடுப்பதற்காக கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு, நிற்கும்படி அவா்கள் கூறினராம்.

கஸ்தூரி 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி பக்கத்தில் இருந்த சோபா மீது வைத்தாராம்.

புகைப்படம் எடுத்துவிட்டு, அவா்கள் குடிப்பதற்கு தண்ணீா் கேட்டதால், கஸ்தூரி தண்ணீா் எடுத்து வர உள்ளே சென்ற போது, அந்த மா்ம நபா்கள் ஷோபா மீது வைத்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து, திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com