புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு இரு இடங்களில் வீடுகளின் முன் நிறுத்தியிருந்த 3 பைக்குகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துச் சென்றனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (38). ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது பைக்கை திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தாா். அதிகாலை அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டுச் சென்றனா். இதில், பைக் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதேபோல, புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவில் ஒரு வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 பைக்குகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துச் சென்றனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக முத்தியால்பேட்டை, பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இரவு நேரத்தில் பைக்குகளில் பெட்ரோல் திருட வந்த மா்ம நபா்கள், தீ வைத்துச் சென்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.