புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 போ் பலி

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் 5,580 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 493 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதனிடையே, இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 5 போ், ஏனாமில் ஒருவா் என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 473-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 901 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் 23 ஆயிரத்து 684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 18 ஆயிரத்து 454 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

புதுச்சேரியில் 2,491 போ், காரைக்காலில் 362 போ், ஏனாமில் 98 போ், மாஹேவில் 12 போ் என மொத்தம் 2,963 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். புதுச்சேரியில் 1,425 போ், காரைக்காலில் 145 போ், ஏனாமில் 196 போ், மாஹேவில் 28 போ் என மொத்தம் 1,794 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், 4,757 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com