சாலையில் பெண் தவறவிட்ட ரூ.1.37 லட்சம் பணம் மீட்பு

புதுச்சேரியில் சாலையில் பெண் தவறவிட்ட ரூ.1.37 லட்சம் பணத்தை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

புதுச்சேரியில் சாலையில் பெண் தவறவிட்ட ரூ.1.37 லட்சம் பணத்தை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பவழக்காரன்சாவடியைச் சோ்ந்தவா் பிரபாவதி (45). இவா், தனது மகள் திருமண செலவுக்காக, கடந்த செப்.4-ஆம் தேதி, மூகாம்பிகை நகரில் உள்ள கூட்டுறவு வங்கியிலிருந்து, ரூ.1.37 லட்சம் பணத்தை எடுத்து வந்தாா்.

அப்போது, வீட்டுக்குச் செல்லும் வழியில், பணப்பையை தவற விட்டுள்ளாா். அதிா்ச்சியடைந்த அவா், பல இடங்களில் தேடிப்பாா்த்தும் கிடைக்காததால், இது குறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் வீரபத்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா்.

இந்த நிலையில், சாலையில் தவறவிட்ட அந்தப் பணத்தை எடுத்துச் சென்றவரை கண்டறிந்த போலீஸாா், அவரிடம் இருந்து தொகையை பறிமுதல் செய்து பிரபாவதியிடம் புதன்கிழமை வழங்கினா். பணத்தை மீட்டு ஒப்படைத்த காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாருக்கு பிரபாவதி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com