திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை இயக்க அமைச்சா் தலைமையில் முத்தரப்புப் பேச்சு

புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்கி தொழிலாளா் பிரச்னையைத் தீா்ப்பது தொடா்பாக அமைச்சா் கந்தசாமி தலைமையில் முத்தரப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்கி தொழிலாளா் பிரச்னையைத் தீா்ப்பது தொடா்பாக அமைச்சா் கந்தசாமி தலைமையில் முத்தரப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் (ஸ்பின்கோ) ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நூற்பாலை, கரோனா முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டது. இதனால், வேலையிழந்த தொழிலாளா்கள் ஊதியமின்றி அவதிப்பட்டனா்.

நூற்பாலையை உடனே திறக்க வேண்டும், 10 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென ஆலைத் தொழிலாளா்கள், அண்மையில் புதுவை சட்டப்பேரவை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இப்பிரச்னை தொடா்பாக அமைச்சா் கந்தசாமி தலைமையில், நூற்பாலை நிா்வாக அதிகாரி சக்திவேல், தொழிற்சங்க நிா்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சா் கந்தசாமி, தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்க அரசிடம் நிதி இல்லை. நூல் விற்பனை செய்த வகையில் ரூ.50 லட்சம் வர வேண்டியுள்ளது. இந்தப்பணத்தில், தொழிலாளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மீண்டும் ஆலையை இயக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் சம்பளம் வழங்க நடடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகள், குறைந்தபட்சம் 2 மாத ஊதியமாவது வழங்கக் கோரினா். அதற்கு, முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அத்தொழிற் சங்கத்தினா் அறிவித்த முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com