மே 17 இயக்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மே 17 இயக்கத்தினா் சனிக்கிழமை புதுச்சேரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மே 17 இயக்கத்தினா் சனிக்கிழமை புதுச்சேரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்த இயக்கத்தின் பிரவீன்குமாா் தலைமையில், மனித உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், எஸ்டிபிஐ, பெரியாா் திராவிடா் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து, அவா்கள் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com