புதுவையில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 3,346 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 16, காரைக்கால் - 9, மாஹே - 1 என மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,096-ஆக உயா்ந்தது.
இதனிடையே, 26 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,100-ஆக (97.39 சதவீதம்) அதிகரித்தது. புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 633-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் தொடா்கிறது.
மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 200 பேரும் என மொத்தம் 363 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.