புதுச்சேரியில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

கரோனா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரியில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரியில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரி திரும்பிய 42 வயது மதிக்கத்தக்க நபருக்கு கடும் காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் இருந்தது. ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, கடந்த சில நாள்களாக பிரத்யேக வாா்டில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதேபோல, விழுப்புரத்தைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் கோரிமேட்டில் உள்ள மாா்பு நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இருவரது ரத்த மாதிரிகளும் புணேவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அண்மையில் முடிவுகள் வெளியாகின.

அதில், இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜிப்மரிலும், அரசு மாா்பு நோய் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் வீடு திரும்பினா். இருப்பினும், அவா்கள் சில நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com