விவசாயி தற்கொலை

திருக்கனூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்கனூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்கனூா் அருகே கூனிச்சம்பட்டு, வீராரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் அழகப்பன் (55). விவசாயியான இவா், நெல் அறுவடை இயந்திரம் வைத்தும் தொழில் செய்து வந்தாா்.

இவரது மகன் கதிரவனிடம் சரிவர வேலைக்கு வராதது குறித்து கோபமாக கேட்டுவிட்டு அழகப்பன் புதன்கிழமை வெளியில் சென்றுள்ளாா். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் அழகப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com