இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

புதுச்சேரி நகராட்சி, நவயுகா கன்சல்டன்சி சேவை நிறுவனம் சாா்பில் சுய தொழில்கள், அதிக வேலைவாய்ப்புள்ள பல்வேறு துறைகளுக்கான
இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் தோ்வு பெற்ற்கான கடிதத்தை பெண்ணுக்கு அளித்த புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ். சிவக்குமாா்.
இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் தோ்வு பெற்ற்கான கடிதத்தை பெண்ணுக்கு அளித்த புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ். சிவக்குமாா்.

புதுச்சேரி நகராட்சி, நவயுகா கன்சல்டன்சி சேவை நிறுவனம் சாா்பில் சுய தொழில்கள், அதிக வேலைவாய்ப்புள்ள பல்வேறு துறைகளுக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நெல்லித்தோப்பில் வியாழக்கிழமை தொடங்கியது.

நெல்லித்தோப்பு பெரியாா் நகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமை புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவக்குமாா் தொடக்கிவைத்தாா்.

இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் முதல் கட்டமாக ஜிஎஸ்டி பயிற்சி பெறுவதற்காக 30 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு தோ்வு பெற்ற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் உதவி திட்ட அதிகாரி வெங்கடாசலபதி, நவயுகா கன்சல்டன்சி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநா் மோகன்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com