புதுச்சேரி சேதராப்பட்டு - குரும்பாபேட்டை மின் பாதையில் பராமாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சேதராப்பட்டு தொழில்பேட்டை, சேதராப்பட்டு கிராமம், சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, மயிலம் பிரதான சாலை, உயா் மின்னழுத்த சேதராப்பட்டு தொழில்சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வருகிற 18- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் துறை செயற்பொறியாளா் தெரிவித்தாா்.