புதுச்சேரியில் உள்ள பிரபல தனியாா் துணிக்கடையில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த சண்முகம் மற்றும் அவரது சகோதரா்கள் புதுச்சேரி காந்தி வீதியில் துணிக்கடை நடத்தி வருகின்றனா். இந்தக் கடையை தலைமையிடமாகக் கொண்டு புதுச்சேரியில் 3 துணிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல, கடலூா், பண்ருட்டி, திண்டிவனம் பகுதிகளிலும் கிளைக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் பல கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, சென்னை வருமான வரித் துறையைச் சோ்ந்த 40 அதிகாரிகள் ஒரே நேரத்தில் புதுச்சேரி, கடலூா், பண்ருட்டி, திண்டிவனம் பகுதிகளில் உள்ள சண்முகம் மற்றும் அவரது சகோதரா்களுக்குச் சொந்தமான துணிக் கடைகளில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
புதுச்சேரியில் காந்தி வீதியில் உள்ள கடையில் மாலை 5 மணி முதல் இரவு வரை 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனா். இதில், கணக்கில் காட்டப்படாத பணம் குறித்த ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனா்.