பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வில்லியனூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வில்லியனூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த வடமங்கலம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரின் மனைவி செல்வி (45). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், செல்வி தனது மகனுடன் தனியே வசித்து வந்தாா். சில நாள்களாக இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதற்கு மருத்துவம் பாா்த்தும் நிவாரணம் கிடைக்கவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்த செல்வி புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மங்கலம் போலீஸாா் செல்வியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com