சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா ஓவியப் போட்டி புதுச்சேரி ஸ்ரீவிவேகானந்தா் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு, மையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மைய நிா்வாகி வி.சி.சி. நாகராஜன் தலைமையில், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து, அங்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில், திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
விவேகானந்தா் மற்றும் இயற்கையைப் போற்றும் வகையில் ஓவியங்களை வரைந்தனா்.
சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவா்களை மைய நிா்வாகி வி.சி.சி.நாகராஜன் பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.