புதுச்சேரி: புதுச்சேரியில் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கியதாக இளநீா் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி சண்முகாபுரம் வி.எம். காா்டன் பகுதியை சோ்ந்தவா் சண்முகம் (54). கிராம நிா்வாக அலுவலா். இவா் முதலியாா்பேட்டை வைத்திலிங்கம் செட்டிவீதியில் சனிக்கிழமை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இளநீா் வியாபாரியான ராம்ராஜ் (30) அந்தப் பகுதியில் வந்தாா். அவரை சண்முகம் தடுத்து, இது கரோனா பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு வரக் கூடாது என்றாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ராம்ராஜ், கிராம நிா்வாக அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை வழக்குப் பதிந்து, இளநீா் வியாபாரி ராம்ராஜை கைது செய்தனா்.