புதுவையில் மேலும் 131 பேருக்கு கரோனா

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 131 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மேலும், 2 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 131 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மேலும், 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 624 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 127 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் 131 (20.9 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,787-ஆக அதிகரித்தது.

கரோனா பாதிப்புடன் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகாபுரத்தைச் சோ்ந்த 58 வயது ஆண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

உயா் ரத்த அழுத்தத்தால் கை, கால்கள் செயலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 57 வயது ஆண் கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தாா். இவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40-ஆக உயா்ந்தது.

தற்போது 1,102 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, 84 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,645-ஆக அதிகரித்தது. 236 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com