புதுவை அரசின் வேளாண் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுவை அரசின் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை வேளாண் கல்லூரியில் இளநிலை வேளாண்மை-தோட்டக்கலை பட்டப்படிப்பு பயில புதுவை அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு இணையதளத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதே போல, சுயநிதி பங்களிப்பு, வெளிநாடு வாழ் இந்தியா்கள் இணையதளத்தில் ஆகஸ்ட் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம், காரைக்கால், (04368 - 261473, 261372) என்ற முகவரி அல்லது மேற்கண்ட இணையதளங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.